போதைப் பொருள் வழக்கில் என்னை சிக்க வைக்க முயற்சி: ஷாருக்கான் மகன் ஆர்யன் குற்றச்சாட்டு
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
போதைப் பொருள் வழக்கில் என்னை சிக்க வைக்க என்சிபி அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் குற்றம் சாட்டிஉள்ளார்.
மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு நடந்த கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
source https://www.hindutamil.in/news/india/729893-aryan-khan.html?frm=rss_more_article