முதல்வர் ஆதித்யநாத் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சென்ற மர்ம நபர்: உ.பி.யில் 7 போலீஸார் சஸ்பெண்ட்
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் அரங்கில் கடந்த வியாழக்கிழமை அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவிருந்தார். இதனை முன்னிட்டு அந்த அரங்கை சுற்றியுள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், பல அடுக்கு சோதனைகளுக்கு பிறகே பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
source https://www.hindutamil.in/news/india/729891-7-policemen-suspended-in-up.html?frm=rss_more_article