விளையாட்டாய் சில கதைகள்: காலி மைதானத்தில் நடந்த கால்பந்து

விளையாட்டாய் சில கதைகள்: காலி மைதானத்தில் நடந்த கால்பந்து

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களே இல்லாமல் மைதானங்களில் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக கடந்த ஆண்டிலேயே ரசிகர்கள் இல்லாமல் கால்பந்து போட்டியை நடத்தியுள்ளது வட கொரிய அரசு. தென் கொரியா மற்றும் வடகொரியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிதான் இப்படி ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் இந்நாடுகளிடையே இருந்த பகை.

தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்தச் சூழலில் கடந்த ஆண்டு வடகொரியாவின் பியாங்யாங் நகரில் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் தென் கொரிய – வட கொரிய அணிகள் மோதியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel