உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுக்கு 40% இடம் ஒதுக்கப்படும்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா அறிவிப்பு
புதன், 20 அக்டோபர், 2021
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுக்கு 40% இடம் ஒதுக்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா (49) அறிவித்துள்ளார்.
உ.பி. சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் பல்வேறு உத்திகளை வகுத்து வருகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் அதிக முனைப்பு காட்டுவதற்கு, தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா வதேரா நியமிக்கப் பட்டதே காரணமாகும்.
source https://www.hindutamil.in/news/india/728471-congress-to-reserve-40-per-cent-tickets-for-women-in-up-polls-says-priyanka.html?frm=rss_more_article