கரோனா தொற்று முற்றிலும் குறைந்தால்தான் மாற்றுத்திறனாளிகள் முதியோருக்கு சிறப்பு தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
புதன், 20 அக்டோபர், 2021
கரோனா பரவலால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி முதல், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசன முறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது.
தற்போது, விஐபி பிரேக் தரிசனங்கள், வாணி அறக்கட்டளை தரிசனம், ரூ.300 சிறப்பு ஆன்லைன்தரிசனம் மற்றும் ஆன்லைனில் இலவச தரிசனம் என தினமும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின் றனர். முன்பதிவு செய்யாமல் வரும்பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடி அருகே சோதனைக்கு பிறகுதிருப்பி அனுப்பி விடுகின்றனர்.
source https://www.hindutamil.in/news/india/728472-tirupati-devasthanam.html?frm=rss_more_article