கேரள மோசடி தொழிலதிபர் மான்சோன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
புதன், 20 அக்டோபர், 2021
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மான்சோன் மாவுங்கல். இவர் எர்ணாகுளத்தில் பழங்காலப் பொருட்கள் அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வந்தார். காவல் துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்த இவர் கேரளாவில் மிகுந்த செல்வாக்கு பெற்ற நபர்களில் ஒருவராக விளங்கி வந்தார். இந்நிலையில், இவர் மீது முதல்வர் பினராயி விஜயனிடம் தொழிலதிபர்கள் சிலர் நேரடியாக புகார் அளித்தனர். அதில் பழங்காலப் பொருட்கள் எனக் கூறி போலியானவற்றை மாவுங்கல் ஏமாற்றி தங்களிடம் விற்றதாக அந்தப் புகாரில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, போலீஸார் அவரை அண்மையில் கைது செய்தனர். அதன் பிறகு, அவர் மீது ஏராளமான மோசடி புகார்கள் குவிய தொடங்கியுள்ளன. எனவே, அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.
source https://www.hindutamil.in/news/india/728470-police-register-pocso-case-against-monson-mavunkal.html?frm=rss_more_article