சாகித்ய விருதுகளை திரும்பப் பெற இயலாது: விருதாளர்களுக்கு சாகித்ய அகாடமி மீண்டும் கைவிரிப்பு
வெள்ளி, 11 டிசம்பர், 2020
விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய விருதுகளை எழுத்தாளர்கள் திரும்ப ஒப்படைக்க முன்வந்துள்ள நிலையில், விருதுகளை திரும்பப் பெறும் நடைமுறை விதிகளில் இல்லை என சாகித்ய அகாடமி மீண்டும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பஞ்சாபில் 15-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/610544-literary-awards.html?frm=rss_more_article