ஆந்திராவில் மர்ம நோய் பரவல் காரணமாக தண்ணீர் குடிக்கவே அஞ்சும் பொதுமக்கள்

ஆந்திராவில் மர்ம நோய் பரவல் காரணமாக தண்ணீர் குடிக்கவே அஞ்சும் பொதுமக்கள்

ஏலூரு: ஆந்திர மாநிலம் ஏலூரு மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள், கடந்த சனிக்கிழமை இரவு முதல் வலிப்பு, வாந்தி, மயக்கம் என ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, டெல்லி, புனே நகரங்களில் இருந்தும், உலக சுகாதார மையத்தில் இருந்தும் மருத்துவக் குழுவினர் ஏலூரில் முகாமிட்டுள்ளனர்.

இதுவரை 580-க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 153 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தண்ணீர், பால் ஆகியவற்றையும் பரிசோதித்து வருகின்றனர்.



source https://www.hindutamil.in/news/india/610111-andhra.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel