விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்தும் அகாலி தளம்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட திட்டம்
வியாழன், 10 டிசம்பர், 2020
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறிய சிரோன்மணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சி, அடுத்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
பஞ்சாப் மாநில கட்சியான எஸ்ஏடி நீண்ட காலமாக பாஜகவின் தோழமைக் கட்சியாக இருந்தது. பாஜக ஆதரவுடன் பஞ்சாபில் கடந்த முறை ஆட்சி நடத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசில் எஸ்ஏடி கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், அமைச்சராக இருந்தார்.
source https://www.hindutamil.in/news/india/610113-farmers-protest.html?frm=rss_more_article