கேரள தங்கக் கடத்தல் வழக்கு சிறையில் அச்சுறுத்தல் என ஸ்வப்னா புகார்: பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு
வியாழன், 10 டிசம்பர், 2020
சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உட்பட சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/610115-kerala-gold-case.html?frm=rss_more_article