தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே அமைதிக்கு சுயக் கட்டுப்பாடு மிகமிக அவசியம்: சீனாவுக்கு மறைமுகமாக ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
வெள்ளி, 11 டிசம்பர், 2020
ஆசியான் கூட்டமைப்பில் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) இடம்பெற்றுள்ள உறுப்புநாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு (ஏடிஎம்எம் பிளஸ்)வியட்நாமில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
ஆசிய பிராந்தியத்தின் அமைதி,ஸ்திரத்தன்மைக்கான அச்சாணியாக ஆசியான் பாதுகாப்புத் துறைஅமைச்சர்கள் மாநாடு உருவாகியுள்ளது. இதனால் நாடுகளுக்கு இடையே தேவையற்ற மோதல்கள் உருவாவது முற்றிலுமாக தவிர்க்கப்படும். இதனை நாம் அனைவரும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
source https://www.hindutamil.in/news/india/610559-rajnath-singh.html?frm=rss_more_article