மத்கியால் வகை செம்மறியாட்டை ரூ.70 லட்சத்துக்கு கேட்ட வியாபாரி
திங்கள், 14 டிசம்பர், 2020
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் மத்கியால் கிராமத்தில் உள்ள செம்மறியாடுகள் அதிகம்புகழ்பெற்றவை. இதன் வித்தியாசமான தோற்றத்துக்கும், இதன் இறைச்சிக்கும் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கி வருகின்றனர். மத்கியால் கிராம மக்கள் அனைவருமே செம்மறியாடு வளர்த்து அதை விற்று வாழ்க்கை நடத்தி வருபவர்கள். மத்கியால் வகை செம்மறியாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் மகாராஷ்டிர கால்நடை வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் மத்கியால் கிராமத்தைச் சேர்ந்த பாபு மெட்காரி என்ற விவசாயி வளர்த்து வரும் செம்மறியாட்டை சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.70 லட்சம் வரை விலை கேட்டுள்ளார்.
source https://www.hindutamil.in/news/india/611566-sheep-goat.html?frm=rss_more_article