புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள் ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமித் ஷா, நரேந்திர சிங் தோமர் ஆலோசனை
திங்கள், 14 டிசம்பர், 2020
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் வலுத்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக போராட டெல்லிக்கு படையெடுத்த ராஜஸ்தான், ஹரியாணா மாநில விவசாயிகளை எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆலோசனை நடத்தினார்.
source https://www.hindutamil.in/news/india/611551-farmers-protest.html?frm=rss_more_article