தொடர்ந்து 15 நாட்கள் வரை போரிடுவதற்காக ஆயுதங்களை தயார்படுத்துகிறது ராணுவம்
திங்கள், 14 டிசம்பர், 2020
இந்திய ராணுவம் 15 நாட்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்கு தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்களை தயார் செய்து வருகிறது.
லடாக் மட்டுமன்றி வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் சீன ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக இந்தியா - சீனா இடையிலான போர்ப் பதற்றம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது பீரங்கி தாக்குதலை நடத்தி வருகிறது.
source https://www.hindutamil.in/news/india/611568-indian-army.html?frm=rss_more_article