குஜராத்தில் படேல் சிலை பார்வையாளர் கட்டணத் தொகையில் ரூ.5 கோடி ஊழல்
வியாழன், 3 டிசம்பர், 2020
குஜராத்தில் ஒற்றுமையின் சிலைக்கான பார்வையாளர் கட்டணத் தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ.5.24 கோடி முறைகேடு செய்ததாக தனியார் வசூல் ஏஜென்சி ஊழியர்கள் சிலருக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் வல்லபபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படுகிறது. கடந்த 2018-ல்சிலை திறக்கப்பட்டது முதல் குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இது விளங்குகிறது. இங்கு பார்வையாளர்களிடம் இருந்துவசூலிக்கப்படும் கட்டணம், வதோதராவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த டெபாசிட் தொகையை கேவடியா சென்று வசூலித்து வருவதற்காக தனியார் ஏஜென்சி ஒன்றை வங்கி நியமித்திருந்தது.
source https://www.hindutamil.in/news/india/607739-statue-of-unity.html?frm=rss_more_article