ஜே.பி. நட்டா வாகனம் தாக்கப்பட்ட விவகாரம்- 3 மே.வங்க ஐபிஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசு பணிக்கு மாற்றம் உள்துறை அமைச்சகம் உத்தரவு
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்கு வங்கத்தில் பணிபுரியும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு கடந்த புதன்கிழமை சென்றார். கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், டைமண்ட் ஹார்பர் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.
source https://www.hindutamil.in/news/india/611258-jp-nadda.html?frm=rss_more_article