21 சதவீதம் காற்று மாசுவை குறைத்துள்ளோம்: பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை கடந்தும் இந்தியா செயல்படும்: காலநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
கடந்த 2015-ம் ஆண்டு போடப்பட்ட பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை அடையும் பாதையில் இந்தியா பயணிப்பதோடு மட்டுமல்லாமல் இலக்குகளையும் கடந்து எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாக செயல்படும். இதுவரை 21 சதவீதம் காற்று மாசுவை இந்தியா குறைத்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்
பாரீஸ் காலநிைல மாறுபாட்டு ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி 196 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமானது. 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாக்கலை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைப்பது அதிலும் 1.5 டிகிரி செல்சியஸுக்கும் கீழாக குறைக்க வேண்டும். அதாவது தொழிற்மயமாக்கலுக்கு முன்பிருந்த நிலைக்கு செல்ல இலக்குநிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://www.hindutamil.in/news/india/611292-india-not-only-on-track-to-achieve-its-paris-agreement-targets-but-to-exceed-them-pm-modi.html?frm=rss_more_article