இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கர்னல் பிரிதிபால் சிங் கில்லுக்கு 100-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் பிரிதிபால் சிங் கில் தனது 100-வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்.
கடந்த 1920-ம் ஆண்டில் பாட்டியாலாவில் பிறந்தவர் பிரிதிபால். பின்னர் விமானப் படையில் சேர விரும்பி லாகூரில் உள்ள வால்டன் படை தளத்தில் இணைந்தார். பின்னர் பிரிட்டிஷ் அரசு நடத்தி வந்த ராயல் இந்திய விமானப் படையில் இணைந்தார். ஆனால், இவரது தந்தை மேஜர் ஹர்பால் சிங் கில் கூறியதன் பேரில் விமானப் படையில் இருந்து விலகினார்.
source https://www.hindutamil.in/news/india/611259-prithipal-singh-gill.html?frm=rss_more_article