தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
ஞாயிறு, 22 நவம்பர், 2020

தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் 23 முதல் 25-ஆம் தேதி வரை, ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தெற்கு அரபிக் கடல் பகுதியின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது.
source https://www.hindutamil.in/news/india/604134-rain.html?frm=rss_more_article


