வங்கிக் கடன் தவணை செலுத்துவதற்கு மேலும் சலுகை அளிப்பது மிகவும் சிரமம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
கடன் தவணை செலுத்துவதில் மேலும் சலுகை அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போதிலும் பொருளாதாரம் மீட்சியடையாத சூழலில் கடன் தவணை செலுத்துவதில் மேலும் சலுகை அளிக்க வேண்டும் என்று அரசை நிர்பந்திக்க வேண்டாம் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் ரூ.2 கோடி வரையிலான கடன் தொகைக்கு வட்டி மீதான வட்டி சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இது தவிர துறை வாரியாக பிற தொழில்களுக்கும் இத்தகைய சலுகை அளிக்கப்படுமா, அரசமைப்பு சட்டம் 32-ன் கீழ் வேறு சலுகைகள் உண்டா என நீதிபதிகள் கேட்டதற்கு சொலிசிட்டர் ஜெனரல் இவ்விதம் பதில் அளித்தார்.
source https://www.hindutamil.in/news/india/606441-supreme-court.html?frm=rss_more_article