ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ‘பிஐஎஸ்’ ஹெல்மெட் மட்டுமே தயாரித்து விற்க வேண்டும்: மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு
ஞாயிறு, 29 நவம்பர், 2020
இந்திய தர நிர்ணயச் சான்று (பிஐஎஸ்) பெற்ற ஹெல்மெட்களை மட்டுமே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். அவற்றை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தரமற்ற விலை குறைந்த ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுவது தவிர்க்கப்படும். இதனால் தரமான ஹெல்மெட்கள் விற்கப்படுவதோடு விபத்துகளில் விலை குறைந்த ஹெல்மெட்களால் உயிரிழப்பு ஏற்படுவது குறையும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/606440-bis-helmet.html?frm=rss_more_article