‘நிவர்’ புயலின் சூறாவளி காற்றால் ஆந்திர கடற்கரையில் தங்க வேட்டை
ஞாயிறு, 29 நவம்பர், 2020
நிவர் புயலின் சூறாவளி காற்றுக்கு ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடற்கரையில் சில தங்க மணிகள் இருந்ததை மீனவர்கள் கண்டெடுத்தனர். இதனால் சிறிது நேரத்திலேயே நூற்றுக்கணக்கானோர் அந்த இடத்தில் தங்க வேட்டை நடத்தினர்.
நிவர் புயலின் தாக்கம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் மற்றும் ராயலசீமா மாவட்டங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை காக்கிநாடா அருகே உள்ள உப்படா தொரட பேட்டா ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரையில் ஒரு கிராம் மற்றும் 2 கிராம் மதிப்புள்ள தங்க மணிகள் மண்ணில் புதைந்திருந்ததை சில மீனவர்கள் கண்டெடுத்தனர். இந்த செய்தி அதன் சுற்றுப்புற கிராமங்களில் வேகமாகப் பரவியது.
source https://www.hindutamil.in/news/india/606437-nivar.html?frm=rss_more_article