அகமதாபாத், ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் உள்ள கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி ஆய்வு: ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்களுக்கு பாராட்டு
ஞாயிறு, 29 நவம்பர், 2020
அகமதாபாத், ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் உள்ள கரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பிர தமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களுக்கு தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழு வதும் பரவி, லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த 2 நாடுகளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/606424-pm-modi.html?frm=rss_more_article