ஆந்திராவில் நிவர் புயலால் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்
ஞாயிறு, 29 நவம்பர், 2020
ஆந்திராவில் நிவர் புயலால் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
ஆந்திராவில் நிவர் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சித்தூர், கடப்பா மற்றும் நெல்லூர் மாவட்டங்களை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர் அவர் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் ஆட்சியர்கள், வருவாய், பஞ்சாயத்து, மாநகராட்சி, நகராட்சி, வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
source https://www.hindutamil.in/news/india/606412-andhra-nivar-relief-fund.html?frm=rss_more_article