ரூ.9.35 கோடி சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஒடிசா ஐஎப்எஸ் அதிகாரி அபே காந்த் பதக் சஸ்பெண்ட்
ஞாயிறு, 29 நவம்பர், 2020
சொத்துக்குவிப்பு வழக்கில் தனது மகனுடன் கைது செய்யப்பட்ட ஐஎப்எஸ் (இந்திய வனப் பணி) அதிகாரி அபே காந்த் பதக்கை ஒடிசா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஒடிசா அரசில் கூடுதல் முதன்மைதலைமை வனப் பாதுகாவலர் (ஏபிசிசிஎப்) ஆக இருந்தவர் அபேகாந்த் பதக். 1987-ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக அபே காந்த் பதக்மற்றும் அவருக்கு நெருக்கமானவர் களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
source https://www.hindutamil.in/news/india/606414-abhay-kant-pathak.html?frm=rss_more_article