ராணுவ வீரர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் லடாக்கில் நவீன குடியிருப்புகள் தயார்
வியாழன், 19 நவம்பர், 2020
லடாக்கில் கடும் பனியில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்குவதற்கு நவீன குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். அவர்களை தடுக்க இந்திய ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அவரவர் எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அதன்படி, இந்திய வீரர்கள் ஆயிரக்கணக்கில் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
source https://www.hindutamil.in/news/india/603021-ladakh.html?frm=rss_more_article