பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: அந்தமான் தீவில் இலக்கை துல்லியமாக தாக்கியது
புதன், 25 நவம்பர், 2020
அந்தமான் தீவில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங் கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் செயல்பாட்டில் உள்ளன. உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது.
source https://www.hindutamil.in/news/india/605066-brahmos-missile.html?frm=rss_more_article