கேரள பஞ்சாயத்து தேர்தல் வரலாற்றில் பாஜக சார்பில் முதல் முறையாக போட்டியிடும் முஸ்லிம் பெண்
புதன், 25 நவம்பர், 2020
முத்தலாக் தடை கொண்டு வந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள முஸ்லிம் பெண், கேரள பஞ்சாயத்து தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் டி.பி.சுல்பத். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வண்டூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட எமான்கட் வார்டு தேர்தலில் போட்டியிட பாஜக வேட்பாளராகக் களம் இறங்கி இருக்கிறார். இதற்கான வேட்புமனுதாக்கல் செய்த பின்னர், சுல்பத்துக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
source https://www.hindutamil.in/news/india/605065-muslim-woman-candidate-of-bjp.html?frm=rss_more_article