டெல்லியில் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு: அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அழைப்பு
வியாழன், 19 நவம்பர், 2020
டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் துர்க்கா பூஜை, தீபாவளி, சாத் பூஜை ஆகிய பண்டிகைகளில் மக்கள் சமூக விலகலைப் பின்பற்றாதது, அதிகரித்து வரும் காற்று மாசு ஆகியவற்றால் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 131 பேர் உயிரழந்தனர், 7,486 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். டெல்லியில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/603029-covid-delhi-records-highest-single-day-death-count-kejriwal-calls-all-party-meeting-to-discuss-coronavirus-situation.html?frm=rss_more_article