எடியூரப்பாவின் செயலாளர் தற்கொலை முயற்சி

எடியூரப்பாவின் செயலாளர் தற்கொலை முயற்சி

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உறவினரான என்.ஆர்.சந்தோஷ், கடந்த மே 28-ம்தேதி அவரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதல்வர் அலுவலகத்தில் அதிகார மையமாக இருந்த என்.ஆர்.சந்தோஷ், நேற்று முன் தினம் இரவு அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, எம்.எஸ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா நேற்று மருத்துவமனைக்கு சென்று, என்.ஆர்.சந்தோஷின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் எடியூரப்பா கூறும்போது, ‘என்.ஆர்.சந்தோஷின் உயிருக்கு ஆபத்து இல்லைஎன மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது''என்றார்.



source https://www.hindutamil.in/news/india/606418-yediyurappa.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel