10 ஆண்டுகளாக 50 சிறுவர்களை ஏமாற்றி பாலியல் வீடியோ எடுத்து வந்த உ.பி. அரசுப் பொறியாளர் கைது
வெள்ளி, 20 நவம்பர், 2020
உத்தரபிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 50 சிறுவர்களை ஏமாற்றி பாலியல் வீடியோ எடுத்துவந்த அரசுப் பொறியாளர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் தடுப்பு என ஒரு புதிய பிரிவு சிபிஐயில் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் செயல்படும் அப்பிரிவின் சார்பில் இணையதளங்களில் தொடரும் விசாரணையில், உ.பி.யின் பின்தங்கிய மாவட்டங்கள் நிறைந்த புந்தேல்கண்ட் பகுதியிலிருந்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இங்குள்ள சித்ரகுட் நகரில் வசிக்கும் உ.பி. நீர்வளத்துறை பொறியாளரான ராம்பவன், கடந்த 10 ஆண்டுகளாக சிறுவர்களை ஏமாற்றி பாலியல் வீடியோ எடுத்து வந்துள்ளார். அவற்றை இந்தியா மற்றும் வெளிநாட்டு இணைய தளங்களில் அவர் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
source https://www.hindutamil.in/news/india/603337-up-government-engineer-arrested.html?frm=rss_more_article