ஆந்திராவில் அரசு பள்ளிகளில் சேர கூடுதலாக 2.68 லட்சம் மாணவர் விண்ணப்பம்
வெள்ளி, 20 நவம்பர், 2020
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கல்வி சீர்திருத்த திட்டத்தின்படி இந்த ஆண்டில் கூடுதலாக 2.68 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேருவதை விட, அரசுப் பள்ளிகளில் சேர பதிவுசெய்துள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 42.46 லட்சம் மாணவர் கள் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் சேர பதிவு செய்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டில் 39.78 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தனர். இந்த ஆண்டு 2.68 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/603336-andhra-government-schools.html?frm=rss_more_article