விளையாட்டாய் சில கதைகள்: முதல் போட்டியில் சதம் அடித்த விஸ்வநாத்

விளையாட்டாய் சில கதைகள்: முதல் போட்டியில் சதம் அடித்த விஸ்வநாத்

இந்திய கிரிக்கெட்டை கவாஸ்கர் ஆக்கிரமித்திருந்த காலத்தில், சில போட்டிகளில் அவரையும் கடந்து ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர் குண்டப்பா விஸ்வநாத். ரசிகர்களை மட்டுமின்றி கவாஸ்கரையும் இவரது பேட்டிங் ஸ்டைல் கவர்ந்திருந்தது. அதனால்தான் கவாஸ்கர் தன் மகனுக்கு விஸ்வநாத்தின் பெயரையும் சேர்த்து ரோஹன் ஜெய்விஷ்வா என்று பெயரிட்டார். இப்படி கவாஸ்கரையே கவர்ந்த விஸ்வநாத், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த நாள் இன்று (20-11-1969).

பேட்டிங்கில் பெரியவராக இருந்தாலும், உயரத்தில் குள்ளமானவர் விஸ்வநாத். பிற்காலத்தில் கர்நாடக ஜூனியர் அணிக்கான தேர்வு நடைபெற்றபோது, விஸ்வநாத்தின் உயரத்தைப் பார்த்த தேர்வாளர்கள், அவரால் பவுன்சர் பந்துகளை சமாளிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டனர். ஆனால் பிற்காலத்தில் கர்நாடக ஜூனியர் அணிக்காகவும், ரஞ்சி போட்டிகளில் கர்நாடக அணிக்காகவும் அவர் அதிக சதங்களை விளாசினார். அனைத்து வகை பந்துகளையும் அடித்து நொறுக்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel