உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி
திங்கள், 17 நவம்பர், 2025

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான பி.ஹரிகிருஷ்ணா தோல்வி அடைந்தார்.
கோவாவின் பனாஜியில் இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்றின் டை-பிரேக்கரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஹரி கிருஷ்ணாவும், பெரு நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜோஸ் எடுவார்டோ மார்டினஸ் அல்கான்டாராவும் மோதினர். இதில் அல்கான்டாரா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். இதையடுத்து தொடரிலிருந்து ஹரி கிருஷ்ணா வெளியேறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


