“இந்தியாவே அவருடன் உள்ளது” - அர்ஷ்தீப் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன பஞ்சாப் அமைச்சர்

“இந்தியாவே அவருடன் உள்ளது” - அர்ஷ்தீப் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன பஞ்சாப் அமைச்சர்

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் கேட்ச் ஒன்றை நழுவவிட்டார் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். இந்த அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவியது. அதன் காரணமாக அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லியுள்ளார் பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் குர்மீத் சிங்.

23 வயதான அவர் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பிஷ்னோய் வீசிய 18-வது ஓவரின் மூன்றாவது பந்தை பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி எதிர்கொண்டார். பந்து டாப் எட்ஜ் ஆகி அர்ஷ்தீப் வசம் தஞ்சம் அடைந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார் அவர். அப்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது முதலே அவர் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel