டைமண்ட் லீக் ஃபைனலில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்: வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா
வெள்ளி, 9 செப்டம்பர், 2022
சூரிச் (Zurich): டைமண்ட் லீக் ஃபைனலில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. விளையாட்டு உலகில் இதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் அவர். ஈட்டி எறிதல் விளையாட்டு பிரிவில் அவர் பட்டம் வென்றுள்ளார்.
24 வயதான ஹரியாணாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்திருந்தார். கடந்த ஜூலையில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருந்தார். காயம் காரணமாக நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் பங்கேற்கவில்லை. அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் இறுதியில் களத்திற்கு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்