ஷாஹின் அப்ரிடி விலகல் இந்தியாவுக்கு சாதகம்: பாக். முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ்
திங்கள், 22 ஆகஸ்ட், 2022
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அப்ரிடி விலகியுள்ளது இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் ஒரே பிரிவில் இடம்பெற்று இருக்கும் இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ம் தேதி துபாயில் நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் மோதவுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி காயம் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஷாஹின் அப்ரிடி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்