இணையதள பயன்பாட்டை அதிகரிக்க கிராமங்களில் பறக்கும் மொபைல் டவர்கள்: பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் திட்டம்
வெள்ளி, 22 அக்டோபர், 2021
கிராமப்புறங்களில் இணையதள பயன்பாட்டை அதிகரிக்க பறக்கும் மொபைல் டவர்களை அமைக்க ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான விஎப்எல்ஒய்எக்ஸ் நிறுவனம், மின்னணு பொருள் தயாரிக்கும் எக்ஸ்-பூம்யுடிலிடிஸ் நிறுவனத்தின் அங்கமாகும். இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி, அபிவிருத்தி பிரிவு இத்தகைய பணிக்கான ட்ரோன்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் சூரிய மின்னாற்றல், பேட்டரி மின்சாரம் அல்லது கேசோலின் ஆகியவற்றில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும். ஹைபிரிட் இன்ஜின் மூலமான செயல்பாடு மொபைல் டவருக்கான பணிகளை செயல்படுத்தும்.
source https://www.hindutamil.in/news/india/729135-flying-mobile-towers-may-up-india-broadband-penetration.html?frm=rss_more_article