மது குடிப்போரை கூண்டில் அடைக்கும் கிராமங்கள்: குஜராத்தில் ரூ.2,500 அபராதம் செலுத்தினால் விடுதலை

மது குடிப்போரை கூண்டில் அடைக்கும் கிராமங்கள்: குஜராத்தில் ரூ.2,500 அபராதம் செலுத்தினால் விடுதலை

மது குடித்துவிட்டு வருபவர்களை இரும்புக் கூண்டுக்குள் சிறை வைப்பதை குஜராத் மாநிலம் மோதிபுரா கிராமத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள் அந்த சிறையை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் ரூ.2,500 அபராதம் செலுத்த வேண்டும். இதனால் அந்த கிராமத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

குஜராத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் ஆண்களுக்கு குடிப்பழக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒவ்வொரு கிராமத்திலும் மதுப்பழக்கத்தால் கணவனை இழந்த பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் மதுப்பழக்கத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.



source https://www.hindutamil.in/news/india/729132-villages-where-alcohol-drinkers-are-imprisoned.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel