சீன எல்லை பிரச்சினையும் கரோனா பரவலும் புதிய சவால்கள்: கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கருத்து
வெள்ளி, 4 டிசம்பர், 2020

கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீனா உட்பட எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்தியக் கடற்படை தயார் நிலையில் உள்ளது. கடற்பகுதியில் போர்க்கப்பல்களுடன் போர் விமானங்களின் பலமும் நமக்கு அவசியம்.நாடு பொருளாதார பலம் பெறுவதற்கு கடற்பகுதி பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இதற்கு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் மிகவும் அவசியம். தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 சீன போர்க் கப்பல்கள் உள்ளன. கடற்கொள்ளையர்களுக்கு எதிரான ரோந்துப் பணிக்காக கடந்த 2008 முதல் இவற்றை சீனா பராமரித்து வருகிறது.
source https://www.hindutamil.in/news/india/608079-china-india-clash.html?frm=rss_more_article


