மாநகராட்சி தேர்தலில் டிஆர்எஸ் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வி; ஹைதராபாத்தில் வலுவான கட்சியாக உருவெடுத்த பாஜக: முதல்வர் சந்திரசேகர ராவின் கணக்கு தவிடுபொடி

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வி அடைந்தனர். அதேநேரம் பாஜக வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், எம்பிக்கள் என பலர் ஈடுபட்டனர். இந்த தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைஸியின் பேச்சுக்கு சவால் விடும் வகையில் பாஜகவினர் வரிசை கட்டி ஓவைஸியின் கோட்டையிலேயே அனல் பறக் கும் பிரச்சாரம் செய்தனர். இதன் பலனாக ஹைதராபாத்தில் பாஜக வின் ஓட்டு வங்கி பன்மடங்கு பெருகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியுன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக வெறும் 4 இடங்களில்மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், இம்முறை தனித்து போட்டியிட்டு 48 இடங்களில் வெற்றிக்கனியைப் பறித்து 2-ம் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/608818-hyderbad-municipal-election.html?frm=rss_more_article


