பரிசோதனை தடுப்பூசி போட்ட நிலையில் ஹரியாணா அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று
ஞாயிறு, 6 டிசம்பர், 2020

பரிசோதனை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்ஸின்' என்றபெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் 22 நகரங்களில் 26,000 தன்னார்வலர்கள் பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/608819-anil-vij.html?frm=rss_more_article


