விவசாய பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொடரும் இழுபறி: போராட்டம் தீவிரமடையும் என அறிவிப்பு
வெள்ளி, 4 டிசம்பர், 2020

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவுஎட்டப்படவில்லை. இதனால், தங்கள் போராட்டம் இன்னும் தீவிரமாக தொடரும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவிவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி புறநகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை அவர்கள் ஆக்கிரமித்துள்ளதால் ஒட்டுமொத்த டெல்லியும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/608075-farmers-protest.html?frm=rss_more_article


