அனைத்து அமைச்சர்களையும் நம்புகிறேன் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து
சனி, 5 டிசம்பர், 2020

அனைத்து அமைச்சர்களையும் நம்புகிறேன். யாருடைய தொலைபேசியையும் ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே நேற்று கூறும்போது, "சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு வலுவாக உள்ளது. அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அவர்களை முழுமையாக நம்புகிறேன். யாருடைய தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய நல்லாட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்" என்றார்.
source https://www.hindutamil.in/news/india/608476-uddhav-thackarey.html?frm=rss_more_article


