எங்களுடன் தேசவிரோதிகள் இருந்தால் அவர்களை கைது செய்யுங்கள்: மத்திய அரசின் புகாருக்கு டெல்லி விவசாயிகள் பதில்
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக டெல்லிஎல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில், தேச விரோத குற்றச்சாட்டில் சிறையில் உள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாம், முன்னாள் மாணவர் உமர் காலீத், சமூக செயற் பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், அருண் பெரைரா உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பப்பட்டன. இவர்களை சிறையில்இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
source https://www.hindutamil.in/news/india/611264-delhi-farmers.html?frm=rss_more_article