பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் சீனாவின் அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் முதலீட்டாளர்கள்
செவ்வாய், 15 டிசம்பர், 2020
கடன் நெருக்கடியில் இருக்கும் சீன அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அறிக்கைபடி, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 6.1 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு வழங்க வேண்டிய முதிர்வுத் தொகையை வழங்க தவறிவிட்டன. அந்த நிறுவனங்கள் பெரும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. சீன அரசும் அந்த நிறுவனங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்பதால் நம்பிக்கை இழந்துள்ளதாக முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/611908-chinese-government-organisations.html?frm=rss_more_article