கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 70% இந்தியர்கள் விரும்பவில்லை: சமூக ஊடக தளம் நடத்திய ஆய்வில் தகவல்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 70% இந்தியர்கள் விரும்பவில்லை: சமூக ஊடக தளம் நடத்திய ஆய்வில் தகவல்

கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள், கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமூக ஊடக தளம் இம்மாதம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரோனா தடுப்பூசி தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமுதாய சமூக ஊடக தளம், நாடு முழுவதிலும் 242 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டது. கருத்து கூறியவர்களில் 66 சதவீதம்பேர் ஆண்கள், 34 சதவீதம் பேர் பெண்கள். முதல் ஆய்வு அக்டோர் 15 முதல் 20 வரையிலும் இரண்டாவது ஆய்வு டிசம்பர் 10 முதல் 15 வரையிலும் நடந்தது. இதில் முதல் ஆய்வில் 61 சதவீதம் பேரும் இரண்டாவது ஆய்வில் 69 சதவீதம் பேரும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் தெரிவித்துள்ளனர்.



source https://www.hindutamil.in/news/india/613342-covid-vaccine.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel