ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 443 பேர் மருத்துவமனையில் அனுமதி- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல்
செவ்வாய், 8 டிசம்பர், 2020
ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 443 பேர்மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில்கடந்த சனிக்கிழமை இரவு முதல்தொடர்ந்து 3 நாட்களாக பொதுமக்கள் திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். வாந்தி, மயக்கம், காய்ச்சல், வலிப்பு என பாதிக்கப்பட்டு மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
source https://www.hindutamil.in/news/india/609421-jagan-mohan-reddy.html?frm=rss_more_article