வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கான முன்பதிவு தொடக்கம்: வரும் 25-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 20 ஆயிரம் பேர் தரிசிக்கலாம்
சனி, 12 டிசம்பர், 2020
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை சொர்க்க வாசல் வழியாக தரிசிப்பதற்கான இணையவழி முன்பதிவு நேற்று தொடங்கியது. வரும் 25-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.
வரும் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் மறுநாள் துவாதசியும் வருவதால் அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சொர்க்க வாசல் மூலம் மூலவரை தரிசனம் செய்ய முடியும் இருப்பதால், இவ்வழியாக சென்று சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். இதனால் முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் அலைமோதுவர்.
source https://www.hindutamil.in/news/india/610941-thirupathi.html?frm=rss_more_article