உலக நாடுகளில் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ய நடவடிக்கை: பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் உறுதி

உலக நாடுகளில் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ய நடவடிக்கை: பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் உறுதி

பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவை ஸ்திரமாக வைத்திருப்பதில் இருவரும் பரஸ்பரம் உறுதி தெரிவித்துக் கொண்டோம். கரோனா வைரஸ் சவால்கள், பருவநிலை மாற்றம், இந்திய - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தோம். அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ய வேண்டும் என்று பைடன் வலியுறுத்தினார்.



source https://www.hindutamil.in/news/india/603153-joe-biden.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel